ETV Bharat / state

அரசு ஊழியர்களாக தங்களை அறிவிக்க வேண்டும்- சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை

author img

By

Published : Sep 3, 2021, 7:37 AM IST

சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து பதவி உயர்வு, ஊதிய உயர்வு வழங்கும் கோரிக்கையை நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

the-request-must-be-met-at-this-meeting-nutrition-staff
அரசு ஊழியர்களாக தங்களை அறிவிக்க வேண்டும்- சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை

சென்னை: இதுதொடர்பாக, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் சுந்தரம்மாள், பொதுச்செயலாளர் நூர்ஜகான் ஆகியோர் பேசுகையில், "தமிழ்நாட்டில் சத்துணவு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தார்.

சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து பதவி உயர்வு, ஊதிய உயர்வு வழங்கிடவேண்டும். இந்தத் திட்டத்தில் 38 ஆண்டுகளாக பணிபுரிந்து ஓய்வு பெறுகின்ற சத்துணவு ஊழியர்களுக்கு தற்போது சிறப்பு ஓய்வூதியமாக வழங்கப்படும் 2,000 ரூபாயில் வாழ்க்கை நடத்தமுடியாது.

எனவே, கேள்விக்குறியாக இருக்கின்ற சத்துணவு ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரமும், அமைப்பாளர்களுக்கு ஒட்டு மொத்த தொகையாக ரூ. 5 லட்சமும், சமையல் உதவியாளர்களுக்கு மூன்று லட்சம் ரூபாயும் வழங்கிட வேண்டும்.

மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும்.

இந்தக் கோரிக்கைகள் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளிவரும் என மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம். ஆனால், பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லாதது சத்துணவு ஊழியர் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இந்த கோரிக்கைகளை பரிசீலித்து பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வேண்டும்" என்றனர்.

இதையும் படிங்க: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை வெளியிட்ட 18 அறிவிப்புகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.